கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0
“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதையையே நோக்காகக்கொண்டு கோட்டாபய செயற்படுகின்றார்