நாடாளுமன்றத் தேர்தல் திகதி, இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

🕔 June 8, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை இந்த வாரத்துக்குள் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவரும் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியமையை அடுத்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை 11.10 அளவில் ஆரம்பமாகியது.

ஏற்கனவே, ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜுன் 20ஆம் திகதிக்கு தேர்தல் தினம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆயினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்படி இரண்டு திகதிகளிலும் தேர்தலை நடத்த முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வேட்பாளர்களுக்கான விருப்பு இலங்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல், நாளை வெளியிடப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்