கொரோனா தொற்றினால் இறந்தோரின் உடலை எரிப்பதற்கு எதிரான மனு; இன்று விசாரணை

🕔 June 8, 2020

– அஸ்லம் எஸ். மௌலானா –

கொரோனா தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் அலிஸாஹிர் மௌலானாவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆஜராகி, தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இம்மனு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையை அவதானிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்டோர் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்