வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது 0
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பிள்ளையான் அழைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக,