வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது

🕔 October 11, 2015

Pillaiyan - 01கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பிள்ளையான் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக, அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது

கைது செய்யப்பட்ட பிள்ளையானிடம் விசாரணை நடத்தப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை குறித்து, ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினர் பிள்ளையானிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.

இதேவேளை, அண்மைய விசாரணைகளின் பிரகாரம் – ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமானது, முன்னாள் இராணுவ கேர்ணல் ஒருவரால் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதாகவும், பிள்ளையான் அதனை சரண் என்பவருக்கு கைமாற்றியதாகவும் செய்திகள் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்