Back to homepage

பிரதான செய்திகள்

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 16 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களில் இனி பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர், முதல் தடவையாக நேற்று திங்கட்கிழமை ஒன்றிணைந்த எதிரணியினரின் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து,

மேலும்...
பிரேசில் நாட்டவர்களின் வயிற்றினுள் இருந்து, 163 கொகெய்ன் மாத்திரைகள் மீட்பு

பிரேசில் நாட்டவர்களின் வயிற்றினுள் இருந்து, 163 கொகெய்ன் மாத்திரைகள் மீட்பு 0

🕔2.Jul 2018

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட,  பிரேசில் நாட்டைச் சேர்ந்த இருவரிடமும் இருந்து, இதுவரை 163 கொகெய்னின் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட மாத்திரைகளின் நிறை 960 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் மேற்படி மாத்திரைகளை விழுங்கிய நிலையில் – கடத்த முயற்சித்த போதே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மேலும்...
வங்கி மூடப்பட்டிருந்த சமயம், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம், நகை திருட்டு

வங்கி மூடப்பட்டிருந்த சமயம், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம், நகை திருட்டு 0

🕔2.Jul 2018

அரச வங்கியொன்றில் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வங்கியிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் வங்கி மூடப்பட்டிருந்த சமயம், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று திங்கட்கிழமை காலை ஊழியர்கள் வங்கியை திறந்த சமயத்தில்,

மேலும்...
கடந்த அரசாங்கம் செய்த தவறுகளைத்தான், தற்போதைய ஆட்சித் தலைவர்களும் மேற்கொள்கின்றனர்: அமைச்சர் றிசாட்

கடந்த அரசாங்கம் செய்த தவறுகளைத்தான், தற்போதைய ஆட்சித் தலைவர்களும் மேற்கொள்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0

🕔1.Jul 2018

நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில்,

மேலும்...
மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கா வழங்கிய பணம் குறித்தும் விசாரிக்க வேண்டும்: ஜோன்ஸ்டன்

மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கா வழங்கிய பணம் குறித்தும் விசாரிக்க வேண்டும்: ஜோன்ஸ்டன் 0

🕔1.Jul 2018

மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் கடந்த முறை தோற்கடிப்பதற்காக, அமெரிக்காவின் ஒபாமாஅரசாங்கம் வழங்கிய 678 மில்லியன் டொலர் தொடர்பாக முதலில் விசாரணைசெய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். குருநாகல் மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இதக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “மஹிந்த ராஜபக்ஷவுக்கு 06 மில்லியன்

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது 0

🕔30.Jun 2018

ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒன்றிணை எதிரணியிடம்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என எவரும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். “ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள பிரசன்ன ரணதுங்க குழுவினர் பசில்ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் விமல்வீரவன்ச,

மேலும்...
கல்முனை மாநகர சபைக்குரிய கூட்டத்தில், உத்தரவு பிறப்பித்த ரஊப் ஹசீர்: கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை?

கல்முனை மாநகர சபைக்குரிய கூட்டத்தில், உத்தரவு பிறப்பித்த ரஊப் ஹசீர்: கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை? 0

🕔29.Jun 2018

– அஹமட் – கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும்  அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில், அமைச்சர்  ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ஹசீர் என்பவர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்தமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சின்

மேலும்...
சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம்

சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம் 0

🕔29.Jun 2018

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்திய சிறுபான்மை கட்சிகள் தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையான விடயம் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;தற்போது புதிதாக  கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் சிக்கல்கள் இருப்பது மிகவும் தெளிவானது. இதனை நாங்கள் அந்த

மேலும்...
டெனீஸ்வரன் விவகாரம்: விக்கியின் முடிவுக்கு, நீதிமன்றம் தடை

டெனீஸ்வரன் விவகாரம்: விக்கியின் முடிவுக்கு, நீதிமன்றம் தடை 0

🕔29.Jun 2018

வடக்கு மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரன் நீக்கப்பட்டமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரனை நீக்கியமைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அவரிடமிருந்த அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு குறைகிறது

சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு குறைகிறது 0

🕔29.Jun 2018

சமையல் எரிவாயுவின் விலை, இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை, 138 ரூபாவால் குறைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவுக்கான விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன்படி  1,431 ரூபாவாக

மேலும்...
ஜும்ஆ பிரசங்கம்; கவனிக்க வேண்டிய தவறுகள்: உள்ளிருந்து ஒரு விமர்சனக் குரல்

ஜும்ஆ பிரசங்கம்; கவனிக்க வேண்டிய தவறுகள்: உள்ளிருந்து ஒரு விமர்சனக் குரல் 0

🕔29.Jun 2018

– அஸீஸ் நிஸார்டீன் – கொழும்பு கிறேன்ட்பாஸ் பள்ளிவாசலில் இன்று ஜும்ஆ பிரசங்கம் பொறுக்க முடியாத காது வெடிக்கும் இரைச்சலாக இருந்தது. ஹஸ்ரத் மூச்சு விடாமல் உச்ச ஸ்தாயியில் இடைவிடாது முழங்கிக்கொண்டிருந்தார். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் சத்தம் கூட – சூறாவளி இரைச்சல் போல டிஜிட்டல் ஒலி வாங்கியில் மிகவும் துல்லியமாக கேட்டது. இன்று நவீன

மேலும்...
உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔29.Jun 2018

நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்துல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு

மேலும்...
பத்திரிகை நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் துயரம்

பத்திரிகை நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் துயரம் 0

🕔29.Jun 2018

அமெரிக்கா – மேரிலாண்ட் மாநிலம் அனாபோலிஸில் உள்ள ‘கெபிடல் கெசட்’ எனும் பத்திரிகை நிறுவனத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 05 பேர் பலியாகியுள்ளதோடு; மேலும் பலர் காயமடைந்தள்ளனர். பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊழியர்களே இதன்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் ஜரோட் வரன் ரமோஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தப் பத்திரிகைக்கு

மேலும்...
மாலை நேர வகுப்புகளுக்கு பாடசாலை சீருடையுடன் செல்லவும்: பெண் பிள்ளைகளுக்கு பள்ளிவாசல்கள் சம்மேளனம் அறிவுறுத்தல்

மாலை நேர வகுப்புகளுக்கு பாடசாலை சீருடையுடன் செல்லவும்: பெண் பிள்ளைகளுக்கு பள்ளிவாசல்கள் சம்மேளனம் அறிவுறுத்தல் 0

🕔29.Jun 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் பெண் மாணவர்கள், பாடசாலை சீருடையை அணிந்து செல்லுமாறு, அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க, 06ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவியர்கள், மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் போது பாடசாலை சீருடையை அணியுமாறு அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, பெற்றோர்

மேலும்...
பிரதமர் ரணிலைத் தோற்கடிக்க, ஜனாதிபதி மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த பகீர் தகவல்

பிரதமர் ரணிலைத் தோற்கடிக்க, ஜனாதிபதி மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த பகீர் தகவல் 0

🕔29.Jun 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கு நாம் ஒப்புகொண்ட போதும், தீர்மானத்துக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கான செயற்பாடுகளுக்கு நடுவிலேயே ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைக் கைவிட்டு விட்டார் என்றும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்