வங்கி மூடப்பட்டிருந்த சமயம், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம், நகை திருட்டு

🕔 July 2, 2018

ரச வங்கியொன்றில் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வங்கியிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சனி, ஞாயிறு தினங்களில் வங்கி மூடப்பட்டிருந்த சமயம், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று திங்கட்கிழமை காலை ஊழியர்கள் வங்கியை திறந்த சமயத்தில், அங்கு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமையினை அறிந்து, அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சுமார் 78 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளும், 18 மில்லியன் ரூபாய் பணமும் இதன்போது திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வங்கியில் பொருத்தப்பட்டிருந்த, சிசிரிவி கமரா மற்றும்  அதற்கானஉபகரணங்களும் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம்  பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்னர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்