Back to homepage

Tag "கைது"

பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது

பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது 0

🕔23.Feb 2021

விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைந்த தலைவர் வேலுபில்லை பிரபாகரனின் படங்களுடன் வீடியோவை சமூக ஊடகங்களில் ‘டிக் டோக்’ வழியாக வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது நபர் ஒருவரை பயங்கரவாத புலனாய்பு பிரிவு கைது செய்துள்ளது. சந்தேகநபர் வத்தள பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா

மேலும்...
சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது 0

🕔20.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினால் இந்த யுவதி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதானவர், மாவனெல்லையை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படும்

மேலும்...
லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jan 2021

நபரொருவரிடமிருந்து லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லுனுகம்வெஹர 64 – சிங்கபுர கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாவை நபரொருவரிடமிருந்து பெற்றுக் கொண்ட போது இவர் கைதானார். வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும்...
சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது 0

🕔18.Jan 2021

சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் தரத்தைச் சேர்ந்தவர் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 14 வயதுடைய சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், மேற்படி பொலிஸ் சார்ஜனை, அனுராதபுரம் பொலிஸார்

மேலும்...
119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல்

119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல் 0

🕔7.Jan 2021

பொலிஸ் அவசர தொலைபேசி சேவையான 119ஐ அழைத்து, பொய்யான தகவலைக் கூறி ஏமாற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 40 வயதான மேற்படி நபரைக் கைது செய்த பொலிஸார், அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...
கடத்திச் செல்லப்பட்ட தேரர், எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: சந்தேகத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது

கடத்திச் செல்லப்பட்ட தேரர், எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: சந்தேகத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது 0

🕔5.Jan 2021

அங்வெல்ல – கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர , கொஸ்வத்த , கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடந்த

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் கைது

மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் கைது 0

🕔15.Dec 2020

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொசவுக்குசொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிண்ணியா பிரதேசத்தில் வைத்து இன்று செவ்வாய்கிழமை இவர்

மேலும்...
பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது 0

🕔12.Nov 2020

– பாறுக் ஷிஹான் – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  செயலாளர் பூ. பிரசாந்தன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை

தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை 0

🕔19.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டமையை அடுத்து, அவர் மறைந்திருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவர் மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்துள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், றிசாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும்

மேலும்...
றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது

றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது 0

🕔14.Oct 2020

கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அழகரத்னம் மனோகரன் நேற்று (13) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்தோரை புத்தளத்தில் இருந்து சிலாவத்துறை வரையில் 221 இலங்கை

மேலும்...
றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும்: அப்துல்லாஹ் மஹ்ரூப் 0

🕔14.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை, வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்குடையது எனவும், 52 நாள் அரசாங்கத்துக்கு உதவாத காரணத்தினால் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே இது என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்

மேலும்...
புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்து வந்த பெண் கைது

புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்து வந்த பெண் கைது 0

🕔11.Sep 2020

புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்துவந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு வந்த குறித்த பெண்ணின் உடையை அவதானித்த வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மருத்துவர் ஒருவருடைய மன்னார் பகுதியிலுள்ள இல்லத்தில் உதவி பணிசெய்யும் குறித்த பெண், அந்த மருத்துவர் சுகயீனமடைந்த நிலையில், அவரை

மேலும்...
சட்ட விரோத சிகரட்களுடன் இருவர் கைது; முச்சக்கர வண்டியும் சிக்கியது

சட்ட விரோத சிகரட்களுடன் இருவர் கைது; முச்சக்கர வண்டியும் சிக்கியது 0

🕔8.Sep 2020

– க. கிஷாந்தன் – அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்களை வைத்திருந்த இருவரை டயகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை பிரதேசத்தில் இருந்து டயகம பிரதேசத்திற்கு வருகை தந்த மேற்படி நபர்கள், கடைகளுக்கு சிகரட்களை விற்பனை செய்து கொண்டிருந்த வேளையில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்னர்.  இவர்களிடமிருந்து 150 சிகரெட் பக்கட்கள் அடங்கிய 3000 ஆயிரம் சிகரெட்கள்

மேலும்...
வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது

வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது 0

🕔5.Aug 2020

வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை கைப்பேசியில் படம் எடுத்த ஒருவரை, நாவலபிட்டி பொலிஸார் இன்று கைது செய்தனர். நாவலப்பிட்டி – ஒம்புல்பிட்டிய எனும் இடத்தில் வசிக்கும் 32 வயதான நபர், இன்று காலை நாவலபிட்டிய மத்திய கல்லூரியில் வாக்களிக்கும் போது, தனது வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை படம் எடுத்தார்.

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு 0

🕔31.Jul 2020

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர – கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சம்பந்தப்பட்ட ஆயுத வழக்கில் ஆதாரங்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை அவரது வீட்டில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்