Back to homepage

பிரதான செய்திகள்

நூறாவது வயதில் அப்துல் காதர்; தர்கா நகரின் மூத்த மனிதர்

நூறாவது வயதில் அப்துல் காதர்; தர்கா நகரின் மூத்த மனிதர் 0

🕔25.Nov 2018

– அஸீம் முகம்மட் – பரபரப்பான தற்கால உலகில், ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதென்பது பெரும் சவாலானதாக மாறிப் போயுள்ள நிலையில், தர்கா நகர் – வெலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர், இன்று ஞாயிற்றுக்கிழமை தனது நூறாவது வயதை அடைந்துள்ளார். இரத்தினபுரியில் 1918 .11 .25  இல் பிறந்த இவரின் பெற்றோர், இஸ்லாமியராக

மேலும்...
பனை ஓங்கில் எனப்படும் ராட்சத மீன்; கீரிமலையில் கரையொதுங்கி உள்ளது

பனை ஓங்கில் எனப்படும் ராட்சத மீன்; கீரிமலையில் கரையொதுங்கி உள்ளது 0

🕔25.Nov 2018

– பாறுக் ஷிஹான் –காங்கேசந்துறை பகுதியில் உள்ள கீரிமலை கடலில் (மயானத்துக்கு அண்மையில்) பனை ஓங்கில் எனப்படும் ராட்சத மீனொன்று, இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளது.முகப் பகுதி சேதமடைந்த நிலையில் இந்த மீன், கடந்த நான்கு நாட்களாக கரை ஒதுங்கிய நிலையில் காணப்படுகிறது.பாலூட்டி வகையைச் சேர்ந்த இன்த மீன், திமிங்கலம் மற்றும் கடற்பன்றிக்கு நெருக்கமான இனத்தைச்

மேலும்...
இலங்கையில் 34,316 வேலையற்ற பட்டதாரிகள்; கலைத் துறையினரே அதிகம்

இலங்கையில் 34,316 வேலையற்ற பட்டதாரிகள்; கலைத் துறையினரே அதிகம் 0

🕔25.Nov 2018

இலங்கையில் 34 ஆயிரத்து 316 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் என்று, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 18,626 பேர் கலைப் பட்டதாரிகளாவர். வேலையற்ற மொத்தப் பட்டதாரிகளில் இவர்கள் 54.3 வீதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையின்மை என்பது எதிர்காலத்தில் மிகப் பெரும் சமூகப் பிரச்சினையாகலாம் என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்...
புதிய பிரதமரை நியமிக்கத் தயார்: ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய பிரதமரை நியமிக்கத் தயார்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔25.Nov 2018

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைளைப் பின்பற்றி, பெரும்பான்மையினைக் காண்பித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். அதேவேளை, “மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம். அப்படி அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என நிரூபிக்கப்பட்டால்,

மேலும்...
எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே

எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே 0

🕔24.Nov 2018

நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என்று, பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். “நாடாளுமன்றில் 121 உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், தனிப்பட்ட கட்சி எனும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 100 ஆசனங்களே உள்ளன. அதேபோன்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு

மேலும்...
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக, கலாநிதி சுரேன் ராகவன் நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக, கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் 0

🕔24.Nov 2018

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இவர் நியமனம் பெற்றுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள அலுவலர்களுக்கு புதிய பணிப்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். இதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சமிந்த

மேலும்...
05 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு, சவூதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

05 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு, சவூதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔23.Nov 2018

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 03 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 02 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.சவூதி அரேபிய அரசின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கு பொறுப்பான அமைச்சர் டொக்டர் சாலிஹ் பின்

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார் 0

🕔23.Nov 2018

ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு வழக்கு ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுள்ளார். மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்துவ ஆலயமொன்றில் இருந்தவர்களைத் தாக்கி, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இச்சவம்பவம் 2008

மேலும்...
பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் மீது தற்கொலைத் தாக்குதல்: இரண்டு பொலிஸார் பலி

பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் மீது தற்கொலைத் தாக்குதல்: இரண்டு பொலிஸார் பலி 0

🕔23.Nov 2018

பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சீனத் தூதரகத்தின் மீது, இன்று வெள்ளிக்கிழமை காலை  நடத்தப்பட்ட  தாக்குதலில் குறைந்தது 02 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். சீனத் தூதரகத்தினுள் ஆயுததாரிகள் நுழைய முற்பட்ட போதும், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்துள்ளனர். இதன்போது நடந்த தாக்குதலில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மேலும் சில பொலிஸார் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர். இதேவேளை,

மேலும்...
நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரம்; சபாநாயகர் அறிவித்தார்

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரம்; சபாநாயகர் அறிவித்தார் 0

🕔23.Nov 2018

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அதற்கிணங்க; ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தினேஷ் குணவர்த்தன, எஸ்.பி. திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க மற்றும் விமல் வீரசன்ச ஆகிய 05 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் லக்ஷ்மன் கிரியெல்ல, ரஊப் ஹக்கீம், றிசாட்

மேலும்...
ஆளுந்தரப்பு வெளிநடப்பு; 27ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

ஆளுந்தரப்பு வெளிநடப்பு; 27ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔23.Nov 2018

நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில், தெரிவுக்குழு உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அந்த வகையில், ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவிக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர்

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்: ஜனாதிபதியை கோருகிறார் எஸ்.பி

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்: ஜனாதிபதியை கோருகிறார் எஸ்.பி 0

🕔23.Nov 2018

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பொருட்டு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு, ஜனாதிபதியைக் வேண்டிக் கொள்வதாக, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மை மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும், இது வரை அவர்கள் அதனைக் காட்டவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்

மேலும்...
சொந்த மரணத்தை உணர முடியும்; புதிய ஆய்வுகள் தெரிவிப்பு

சொந்த மரணத்தை உணர முடியும்; புதிய ஆய்வுகள் தெரிவிப்பு 0

🕔22.Nov 2018

இறந்தவர்கள் தமது சொந்த மரணத்தை உணர முடியும் என, புதிய ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, சத்திர சிகிச்சைக்குள்ளாகும் ஒருவருடைய மூளைக்கு  இரத்தத்தை வழங்குவதை இதயம் நிறுத்திக் கொள்ளும் தருணத்தை,  மரணத்தின் அதிகாரப்பூர்வ நேரமாக பதிவு செய்கின்றனர். ஆனாலும், ஒரு குறுகிய நேரத்துக்கு  இறந்த நபரின் மனம் மற்றும் உணர்வுகள் தொடர்ந்து வேலை செய்வதை புதிய ஆய்வுகள்

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்ததன் பின்னணியில் டட்லி; புதிய தகவல் அம்பலம்

மஹிந்தவை பிரதமராக நியமித்ததன் பின்னணியில் டட்லி; புதிய தகவல் அம்பலம் 0

🕔22.Nov 2018

 புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையின் பின்னணியில், ஜனாதிபதியின் சகோதரரும் அரலிய நிறுவனத்தின் தலைவருமான டட்லி சிறிசேன இருந்தார் என்பதை, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என்று, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பு சதியொன்றின் மூலமாக, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணி கூறிவரும் நிலையிலேயே, உதயங்க

மேலும்...
ஜனநாயகத்துக்கு எதிராக, தொடர்ந்தும் மைத்திரி செயற்படுகிறார்: சமந்தா பவர்

ஜனநாயகத்துக்கு எதிராக, தொடர்ந்தும் மைத்திரி செயற்படுகிறார்: சமந்தா பவர் 0

🕔22.Nov 2018

நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டிருந்த நாட்டுமக்களின் நலனை அதிகாரத்தின் ஊடாக சீர்குலைக்கும் வகையில், அவர் செயற்பட்டு வருகின்றார் எனவும் சமந்தா கூறியுள்ளார். நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசியல் குழப்பநிலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்