– பாறுக் ஷிஹான் –காங்கேசந்துறை பகுதியில் உள்ள கீரிமலை கடலில் (மயானத்துக்கு அண்மையில்) பனை ஓங்கில் எனப்படும் ராட்சத மீனொன்று, இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளது.
முகப் பகுதி சேதமடைந்த நிலையில் இந்த மீன், கடந்த நான்கு நாட்களாக கரை ஒதுங்கிய நிலையில் காணப்படுகிறது.
பாலூட்டி வகையைச் சேர்ந்த இன்த மீன், திமிங்கலம் மற்றும் கடற்பன்றிக்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்ததாகும்.
ஆரம்பத்தில் இதனை வெட்டுவதற்கு சிலர் முயற்சித்த போது, அருகில் உள்ள கடற்படையினர் மக்களை இப்பகுதிக்குள் உடனடியாக அனுமதிக்கவில்லை.
ஆயினும் தற்போது மக்கள் இந்த மீனை பார்வையிட்டு வருகின்றனர்.



