யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம்
– பாறுக் ஷிஹான் –
காட்டு யானை தாக்கியமை காரணமாக 03 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தார்.
அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றது.
தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக – இறக்காமம் பகுதிக்கு மோட்டார் பைக்கில் பயணம் செய்தபோதே இவர் யானையின் தாக்குதலுக்குள்ளானார்.
உயிரிழந்தனர் இறக்காமம் 9ஆம் பிரிவைச் சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் சிபானி எனும், 03 பிள்ளைகளின் தாயாவார்.
உயிரிழந்தவரின் பிரேதம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.