முஸ்லிம் காங்கிரசும், போருக்கிடையிலான பேராளர் மாநாடும் 0
உட்கட்சி பிரச்சினைகளைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தருணமொன்றில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பேராளர் மாநாட்டை நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. மு.காங்கிரசின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிருவாகப் பதவிக்குரியவர்களைத் தெரிவு செய்து, அதற்கான அங்கீகாரத்தினை பேராளர் மாநாட்டில்தான் பெறவேண்டும். இன்று சனிக்கிழமை, மு.கா.வின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்தான் மு.கா.வின் நிருவாகத்