கறுப்புப் பட்டியலில் உள்ளோர் சிறையில் அடைக்கப்படுவர்: அமைச்சர் சரத் வீரசேகர 0
இலங்கையிலுள்ள பலருடைய பெயர்களும் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும், அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை அரசு – அண்மையில் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தடை செய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் இலங்கையில் வசித்து வருகின்றனர். இவ்வாறானதொரு