பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் படங்கள் வெளியிடப்படும்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 December 13, 2020

– றிசாத் ஏ காதர் –

கொலைகள், பாரிய குற்றச் செயல்கள் ,சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைதான பின்னர், அவர்களின் படங்களை வெளியிட்டு மக்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

“ஒரு இளைஞனை பொல்லுகள், கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கொண்டு கொடூரமாக தாக்கிய மூன்று நபர்கள் – சி.சி.ரீவி கெமராக்கள் மூலம் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று நபர்களின் விவரங்களுடன் படங்களும் பொதுமக்களை விழிப்பூட்டும் பொருட்டும், குற்றச் செயல்களை குறைக்கும் வகையிலும் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இதுபோன்ற குற்றங்கள், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரங்களைச் செய்தவர்கள் – கைது செய்யப்பட்டவுடன் அவர்களின் படங்கள் மற்றும் விவரங்கள் வெளியிடப்படும்.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குற்றச் செயல்கள் தொடர்பில் அச்சத்துடன் அதிலிருந்து தவிர்ந்துகொள்ளும் பொருட்டும், ஊடகங்களுக்கு இவ்வாறு தெரியப்படுத்தப்படும்” என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்