பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல் 0
இலங்கையின் இனமுரண்பாட்டுச் சூழ்நிலையில் உருவான ஒரு பல்கலைக்கழகமே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். அக்கால கட்டத்தில் இப்பல்கலைக்கழகம் தமிழ்பேசும் மாணவர்களுக்குரிய பல்கலைக்கழகமாக இருந்தாலும் அது இன்று ஒரு தேசிய பல்கலைக்கழகத்திற்குரிய எல்லா குணாம்சங்களையும் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. இப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்கு பெரும்பங்குண்டு. முஸ்லிம் சமூகத்தின் ஒப்பற்ற தலைவனாக அப்போதிருந்த