தொல்பொருள் திணைக்களத்தின் பணிபாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமனம்
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த நியமனம் அமுலுக்கு வருகிறது.
இவர் களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியராகக் கடமையாற்றி வருகின்றார்.
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றி வரும் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளதால், அந்த வெற்றிடத்துக்கு பேராசிரியர் அனுர மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.