பசில் – ரணில் நேற்றிரவு சந்திப்பு 0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்பான