புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது: தமிழர்கள் இருவர், முஸ்லிம் எவருமில்லை 0
புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதற்கமைய, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.