பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார்

🕔 November 21, 2019

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரிய வெற்றியை பெற்ற நிலையில், இடைகால அரசாங்கமொன்றை நடத்திச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில், ரணில் விக்ரமசிங்க தனது பிரதம மந்திரி பதவியை நேற்றைய தினம் ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்