லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை 0
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.