அனுமதி வழங்கப்பட்ட 1300 பிஸ்டல்கள், பொதுமக்களிடம் உள்ளன: பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவிப்பு 0
அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட 1300 பிஸ்டல் கைத்துப்பாக்கிகள் பொதுமக்களிடம் உள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் என்.டி. பண்டிதரத்ன தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக 19,000 துப்பாக்கிகள் விவசாய நோக்கத்துக்காக வழங்கப்பட்டிருந்தன என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்த பொதுமன்னிப்பு காலப்பகுதியில், 1000க்கும் அதிகமான துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன எனவும் அவர் விபரித்தார். இதேவேளை, 2018ஆம் ஆண்டுக்கான