Back to homepage

பிரதான செய்திகள்

பதவி விலகுங்கள்; பிரதமரிடம் அமைச்சர் நிமல் கோரிக்கை

பதவி விலகுங்கள்; பிரதமரிடம் அமைச்சர் நிமல் கோரிக்கை 0

🕔3.Apr 2018

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டுமென, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை, பிரமரிடம் அமைச்சர் நிமல்  சிறிபால டீ சில்வா தெரியப்படுத்தியுள்ளார் என்று, அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார். பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகுமாறு கோருவதென சுதந்திர கட்சியின்

மேலும்...
ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும்

ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும் 0

🕔3.Apr 2018

– அஹமட் – தனது பதவியையும் அரசியல் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்; முஸ்லிம் சமூகத்தை விலைபேசுவதற்கும் தயங்க மாட்டார் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான பிரதி மேயர் தெரிவின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகவும், கல்முனை மாநரக சபை

மேலும்...
வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான்

வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான் 0

🕔3.Apr 2018

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரும் என, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நேற்று திங்கட்கிழமை இரவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு இதுவரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில்,

மேலும்...
பல்கலைக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை கைவிட இணக்கம்: அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவிப்பு

பல்கலைக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை கைவிட இணக்கம்: அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவிப்பு 0

🕔3.Apr 2018

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று, உயர்கல்வி அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கல்வி சாரா ஊழியர்களுடன் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து வேலை நிறுத்தத்தைக் கைவிடுவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கல்வி சாரா ஊழியர்கள் விடுமுறைத் தினங்களில் பணியாற்றுவதற்கான கொடுப்பனவை

மேலும்...
மு.காங்கிரஸ் ஆதரவுடன், கல்முனை மாநகர சபையில் தமிழரொருவர் பிரதி மேயராகத் தெரிவு

மு.காங்கிரஸ் ஆதரவுடன், கல்முனை மாநகர சபையில் தமிழரொருவர் பிரதி மேயராகத் தெரிவு 0

🕔2.Apr 2018

– முன்ஸிப் அஹமட் – கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 41 ஆசனங்கள் உள்ள கல்முனை மாநகர சபையில், மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, பிரதி மேயர் பதவியினைப் பெற்றுள்ளது. மேயர் பதவிக்கு போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கு

மேலும்...
மருதமுனைக்கு மேயர் பதவி; இரண்டாவது முறையும் வாய்த்தது

மருதமுனைக்கு மேயர் பதவி; இரண்டாவது முறையும் வாய்த்தது 0

🕔2.Apr 2018

– மப்றூக் – கல்முனை மாநகர சபையின் மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவானமையினை அடுத்து, மருதமுனை பிரதேசம், இரண்டாவது தடவையாகவும் மேயர் பதவியினைப் பெற்றுக் கொண்டுள்ளது. கல்முனை மாநகரசபையின்  06ஆவது மேயராக மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டார். மு.காங்கிரஸ் பிரமுகரான சட்டத்தரணி றக்கீப், இம்முறை ஐக்கிய தேசியக்

மேலும்...
கல்முனையைக் கைப்பற்றியது மு.காங்கிரஸ்; மேயரானார் சட்டத்தரணி றக்கீப்

கல்முனையைக் கைப்பற்றியது மு.காங்கிரஸ்; மேயரானார் சட்டத்தரணி றக்கீப் 0

🕔2.Apr 2018

– மப்றூக், படஙகள்: எஸ்.எல். அஸீஸ் – கல்முனை மாநகர சபையின் ஆட்சியை  யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. குறித்த சபையின் முதல் அமர்வு – இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ஆரம்பித்தது. இதன்போது கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.

மேலும்...
குளியாப்பிட்டிய பிரதேச சபையில், மயிலுக்கு பிரதி தவிசாளர் பதவி

குளியாப்பிட்டிய பிரதேச சபையில், மயிலுக்கு பிரதி தவிசாளர் பதவி 0

🕔2.Apr 2018

குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் (தமாரை மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் (மயில் சின்னம்) இணைந்து கைப்பற்றிக்கொண்டது. மேற்படி பிரதேச சபையின் முதல் அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த விஜயசிறி ஏக்கநாயக்க 21 வக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள்

மேலும்...
தமிழ் பிரதேச செயலகத்துக்கான எதிர்ப்பை கைவிட்டால், கல்முனை மாநகர சபையில் மு.கா.வுக்கு ஆதரவளிப்போம்: ஹென்றி மகேந்திரன் நிபந்தனை

தமிழ் பிரதேச செயலகத்துக்கான எதிர்ப்பை கைவிட்டால், கல்முனை மாநகர சபையில் மு.கா.வுக்கு ஆதரவளிப்போம்: ஹென்றி மகேந்திரன் நிபந்தனை 0

🕔2.Apr 2018

– அஹமட் – கல்முனை மாநகரசபையில் மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாயின், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதற்கு மு.காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்றும், தேவையேற்படும் போது ஆதரவளிக்க வேண்டும் எனவும், கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார். த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, மேற்படி விடயத்தை ஒரு

மேலும்...
மொட்டு வசமானது கோட்டே ; மதுர விதானகே மேயரானார்

மொட்டு வசமானது கோட்டே ; மதுர விதானகே மேயரானார் 0

🕔2.Apr 2018

ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டே மாநகரசபையினை தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியுள்ளது. மேற்படி சபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோது, அச் சபைக்கான மேயர் தெரிவு திறந்த வாக்களிப்பு மூலம் நடத்தப்பட்டது. இதன்போது, பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே 23 வாக்குகளைப் பெற்று மேயராகத்

மேலும்...
விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள், பூமியில் இன்று விழுகின்றன

விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள், பூமியில் இன்று விழுகின்றன 0

🕔2.Apr 2018

சீன விண்வெளி நிலையமொன்றின் உடைந்த பாகங்கள் இன்று திங்கட்கிழமை பூமியில் விழுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென, அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் வளிமண்டலத்துக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென் பசிஃபிக், சீனப்பகுதிக்கு மேலே – இவை இருப்பதாக சீன மற்றும் அமெரிக்க

மேலும்...
காடையர்களைப் பிடிக்க, கண்டி வந்திறங்கியது பயங்கரவாத புலனாய்வு பிரிவு

காடையர்களைப் பிடிக்க, கண்டி வந்திறங்கியது பயங்கரவாத புலனாய்வு பிரிவு 0

🕔2.Apr 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காடையர்களைக் கைது செய்வதற்காக, பயங்கரவாத புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டிக்கு வந்துள்ளனர். சி.சி.ரி.வி. காட்சிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அநேகமானோர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கண்டி தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணை; ரணிலுக்கு ‘குறி’ சொல்லும் மஹிந்த தரப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை; ரணிலுக்கு ‘குறி’ சொல்லும் மஹிந்த தரப்பு 0

🕔2.Apr 2018

– எம்.ஐ. முபாறக் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை, வாக்கெடுப்புக்காக வரும் நாள் நெருங்க நெருங்க, அது தொடர்பிலான செயற்பாடுகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளன. பிரதமரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகளும், எப்படியாவது அவரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக ஓடித் திரிகின்றன. குறிப்பாக, பிரேரணையைக்

மேலும்...
மைத்திரியின் கைகளில்தான், நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு தங்கியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

மைத்திரியின் கைகளில்தான், நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு தங்கியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔1.Apr 2018

– க. கிஷாந்தன் – பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவின் கைகளிலேயே தங்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உல்லாச விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ,

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை 0

🕔1.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பார்களாயின், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என, அந்தக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தின்போதே, அவர் இதனைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்