நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன் 0
பழையவர்கள்தான் எம்.பி.யாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை