வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து 0
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று புதன்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர் என அறிய முடிகிறது. வட மாகாண சபையில் மொத்தமாக 38 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், இந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. வடக்கு