கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு 0
கொவிட் நிவாரப் பணிகளுக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாது என்று ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே வெட்டப்படுவதால், கொவிட் பணிக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாத இக்கட்டான நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.