உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல் 0
– முகம்மது தம்பி மரைக்கார் – எழுந்தமானமாக ஓரிடத்தில் கூடிநின்ற சிலரிடம், விருப்பு “வாக்குகளை எவ்வாறு வழங்குவது” எனக் கேட்டபோது, அவர்களில் கணிசமானோர் கூறிய பதில்கள் தவறாக இருந்தன. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்கு புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும்