Back to homepage

Tag "பொலிஸ் பேச்சாளர்"

கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர

கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர 0

🕔13.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கடந்த 04ஆம் திகதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வரை கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமையவே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று  செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு

கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு 0

🕔11.Mar 2018

கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றிய தகவல்களை, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகரவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அதேவேளை, கண்டியில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பாக கடந்த புதன்கிழமையன்று பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த விபரங்கள் தவறானவை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்

மேலும்...
கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டம்

கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டம் 0

🕔7.Mar 2018

கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்த்தினை பொலிஸார் அமுல் செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் அங்கு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை கடுமையாக முன்னெடுக்கப்படும் என்றும்

மேலும்...
தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற 1041 மேலதிக பணியாளர்கள் நியமிப்பு

தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற 1041 மேலதிக பணியாளர்கள் நியமிப்பு 0

🕔31.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக மேலதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க நாடு முழுவதும் 1041 மேலதிக பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். அந்த வகையில், நாடு முழுவதிலுமுள்ள பிரதான பொலிஸ் நிலையங்களுக்கு 03 பணியாளர்களும், ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு 02 பணியாளர்களுமாக நியமிக்கப்படுவர்

மேலும்...
இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின

இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின 0

🕔22.Dec 2017

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி, சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேற்படி மாத்திரைகள் பேலியகொட பகுதியில் கைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
தேர்தல் தொடர்பான 09 முறைப்பாடுகள் பதிவு; தென்னங் கன்று வழங்கியதாகவும் குற்றச்சாட்டு: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

தேர்தல் தொடர்பான 09 முறைப்பாடுகள் பதிவு; தென்னங் கன்று வழங்கியதாகவும் குற்றச்சாட்டு: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔21.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் வன்முறை மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று, பொலிஸ் பேச்சாளரும், அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். மேற்படி முறைப்பாடுகள் கடந்த 09ஆம் திகதி தொடக்கம் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணி வரையில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தென்னங் கன்றுகளை

மேலும்...
தேர்தல் கட்டளைச் சட்டம், இன்று முதல் அமுல் ; ஒலிபெருக்கி பாவனை நேரங்கள் குறித்தும் பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு

தேர்தல் கட்டளைச் சட்டம், இன்று முதல் அமுல் ; ஒலிபெருக்கி பாவனை நேரங்கள் குறித்தும் பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு 0

🕔11.Dec 2017

உள்ளுராட்சி தேர்தல்கள் கட்டளைச் சட்டம், இன்று திங்கட்கிழமை தொடக்கம், அமுல் செய்யப்படும் என்று, பொலிஸ் பேச்சாளரும் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் தேர்தல் பிரசாரங்களும், அரசியல் பேரணிகளும் தொந்தரவினை ஏற்படுத்தக் கூடாது

மேலும்...
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம்

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம் 0

🕔29.Oct 2017

காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கொஸ்கொட பகுதியிலுள்ள 03 இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, முதலாவது சூட்டுச் சம்பவத்தில் 15 வயதுடைய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டாவது சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது

ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது 0

🕔20.Oct 2017

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ரோஹிங்ய அகதிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அரம்பபொல ரத்னசார தேரர், இன்று வெள்ளிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து, சிறப்பு பொலிஸ் அணியினரால் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த தேரர் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்

மேலும்...
சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

🕔20.Jul 2017

சதொச நிறுவனத்துக்காகக் கொண்டு வரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனில் இருந்து கைப்பற்றப்பட்ட கொகெய்ன் 3.2 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சதொச நிறுவனத்துக்காக பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனியடங்கிய கொளகலனிலிருந்து 218 கிலோகிராம் எடையுடைய கொகெய்ன் போதைப் பொருளை, நேற்று புதன்கிழமை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். ரத்மலானயிலுள்ள சதொச நிறுவனத்துக்குச்

மேலும்...
சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா?

சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா? 0

🕔20.Jul 2017

ரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒறுகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியை  கொள்கலனிலிருந்து, இறக்குவதற்கு முன்னதாகவே, அதிலிருந்த கொகெய்ன் கண்டு பிடிக்கப்பட்டதாாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். பொருட்களை இறக்குவதற்கு முன்னர், வழமையான நடைமுறையின் பிரகாரம் ஊழியர்கள் கொள்கலனைத் திறந்து பார்த்த போது வித்தியாசமான பொதிகள் இருந்ததைக் கண்டதாகவும், அதனையடுத்து, பொலிசாருக்கு சதொச

மேலும்...
பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்

பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம் 0

🕔23.Jun 2017

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணியும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவிக்கு ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா

பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா 0

🕔23.Jun 2017

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்துள்ளதாக, தனது பேஸ்புக் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். தற்போதைய தனது உடல் நிலை காரணமாக, இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸ் பேச்சாளர் பதவிக்கு பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியமிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவே, ஊடகத்துறையினர்

மேலும்...
நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது 0

🕔12.Mar 2017

பொலிஸார் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம், 05 மணி நேரம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, 1,246 பேர் கைது செய்யப்பட்டனர் என, பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான பிரயந்த ஜயக்கொடி தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.00 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரையிலான 05 மணி நேர நடவடிக்கையின்போதே,

மேலும்...
விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் வெள்ளவத்தையில் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் வெள்ளவத்தையில் கைது 0

🕔15.Jan 2016

விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் காலி வீதி, வெள்ளவத்தையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஆயுர்வேத நிலையம் எனும் போர்வையில் விபச்சாரத் தொழிலை நடத்தி வந்த 38 வயதுடைய பெண் ஒருவர் உட்பட மொத்தமாக ஐந்து பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஏனையவர்கள் 21, 22,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்