Back to homepage

மேல் மாகாணம்

புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம்

புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம் 0

🕔27.Oct 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக இந்த நியமனத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமரின் புதிய செயலாளர் தனது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும்...
அலறி மாளிகையை 4.00 மணிக்கு முன்னர் ஒப்படைக்கவும்: அரசாங்கம் உத்தரவு

அலறி மாளிகையை 4.00 மணிக்கு முன்னர் ஒப்படைக்கவும்: அரசாங்கம் உத்தரவு 0

🕔27.Oct 2018

அலறி மாளிகையை ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அந்த வகையில், இன்று சனிக்கிழமை 4.00 மணிக்குள், அலறி மாளிகை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையை அடுத்து, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலறி மாளிகையில் ஐக்கிய

மேலும்...
பிரதமர் மஹிந்தவின் செயலாளராகிறார் லலித் வீரதுங்க

பிரதமர் மஹிந்தவின் செயலாளராகிறார் லலித் வீரதுங்க 0

🕔27.Oct 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக லலித் வீரதுங்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ – ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருடைய செயலாளராக லலித் வீரதுங்க பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜனாதிபதியின் அதிகாரத்துக்கிணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளமையை, ஜனாதிபதி செயலகத் தரப்புக்களும் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலின்

மேலும்...
முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேண வேண்டும்: பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தல்

முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேண வேண்டும்: பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தல் 0

🕔27.Oct 2018

நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், முஸ்லிம் கட்சிகள் நடுநிலையாக இருக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது; நாட்டு மண்ணில் அதிகாரம் இடித்து நாட்டப்பட்டுள்ளது. இத்தருணத்தில் முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேணல் அவசியமாகும். இவ்வாறான நிலைமைகளில் சிறுபான்மைத்

மேலும்...
ஹக்கீம், றிசாட்; ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம்

ஹக்கீம், றிசாட்; ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம் 0

🕔27.Oct 2018

– அஹமட் – ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு, மு.காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. அலறி மாளிகையில் இன்று சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மேற்படி கட்சிகளின் தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தினர்.

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்தமை குறித்து, சட்டம் என்ன சொல்கிறது?

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை குறித்து, சட்டம் என்ன சொல்கிறது? 0

🕔27.Oct 2018

திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் அசோக்பரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2)-ன் கீழ், அமைச்சரவை தொடரும் நிலையில், இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஜனாதிபதியால் பிரதமரை நீக்க முடியும்.

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்தமை கவலைக்குரியது: மு.கா. தலைவர் ஹக்கீம்

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை கவலைக்குரியது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் அஹமட் – மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமையானது, எவ்வளவு அரசியல் நாகரீகமானது என்கிற கேள்வி எழுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தமிழகம் சென்றுள்ள ஹக்கீம், அங்கு வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இதனைக் கூறியுள்ளார். மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர்

மேலும்...
மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து; புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவிப்பு

மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து; புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவிப்பு 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் – பிரதமராகப் பதவியேற்றுள்ள தனது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது ‘டவிட்டர்’ பக்கத்தில் இந்த வாழ்த்தினை கோட்டா வெளியிட்டுள்ளார். பெருமையுடனும், சந்தோசத்துடனும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ,  நிலையானதும் முற்போக்கானதுமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு

மேலும்...
அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு

அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு 0

🕔26.Oct 2018

அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.ரி.என். நிறுவனத்தின் செய்தியறைக்குள் இன்று நுழைந்த குழு ஒருவினர், அங்கிருந்த பணியாளர்களை முரட்டுத்தனமாக வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே, அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான

மேலும்...
நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு

நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு 0

🕔26.Oct 2018

– முன்ஸிப் – புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துள்ள நிலையில், “நான்தான் பிரதமராக இன்னும் பதவி வகிக்கின்றேன்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ரணில் விக்கரமசிங்கதான் பிரதமராக இருக்கின்றார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் பிபிசி க்கு கூறியுள்ளார். இந்த நிலையில், அமைச்சரவை

மேலும்...
பிரதமரானார் மஹிந்த: புரண்டது நல்லாட்சி

பிரதமரானார் மஹிந்த: புரண்டது நல்லாட்சி 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தது. இந்த நிலையில், சமீப காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்

மேலும்...
‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல்

‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல் 0

🕔26.Oct 2018

இந்திய புலனாய்வு பிரிவான ‘ரோ’ வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் இருக்கின்ற அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில், மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், அமைச்சர்கள் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு

மேலும்...
அரச வங்கியொன்றில் கொள்ளை; சிசிரிவி சாதனங்களும் அபேஸ்

அரச வங்கியொன்றில் கொள்ளை; சிசிரிவி சாதனங்களும் அபேஸ் 0

🕔26.Oct 2018

அரச வங்கிக் கிளையொன்றில் துப்பாக்கி முனையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மத்தேகொட பிரதேசத்திலுள்ள குறித்த வங்கிக் கிளைக்கு, கார் ஒன்றில், பிஸ்டல் உள்ளிட்ட துப்பாக்கிகளுடன் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொள்ளையர்கள் வந்திறங்கியுள்ளனர். இதன்போது வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அவற்றின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய்

மேலும்...
45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது 0

🕔26.Oct 2018

ஹெரோயின் போதைப் பொருளை – குளிசை வடிவில் விழுங்கிக் கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 350 கிராம் எடையுடைய 35 ஹெரோயின் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 67 வயதுடைய பெண், மற்றையவர் 44 வயதுடைய ஆண் ஆவார். கைப்பற்றப்பட்ட ஹெரோயின்

மேலும்...
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான சூழலை உருவாக்குவதற்கான, வரைவு அறிக்கை கையளிப்பு

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான சூழலை உருவாக்குவதற்கான, வரைவு அறிக்கை கையளிப்பு 0

🕔25.Oct 2018

“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கி, அவற்றை பெரிய அளவிலான நிலையான வணிக நிறுவனங்களாக மாற்றி,   ஏற்றுமதி சந்தைகளுடன் இணைப்பதற்குகாக, 3.2 மில்லியன் ரூபா செலவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தொழில் முயற்சி ஆய்வினை நடாத்தியுள்ளது. இந்த முயற்சிக்காக நிதி ஆதரவுகளை விரிவுபடுத்தியதற்காக, ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன்”

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்