நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு
– முன்ஸிப் –
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துள்ள நிலையில், “நான்தான் பிரதமராக இன்னும் பதவி வகிக்கின்றேன்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரணில் விக்கரமசிங்கதான் பிரதமராக இருக்கின்றார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் பிபிசி க்கு கூறியுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருக்கிறது.
ஆயினும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளமையானது, அரசியலமைப்புக்கு முரணானது என்று, தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்த ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.