Back to homepage

மேல் மாகாணம்

மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து; புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவிப்பு

மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து; புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவிப்பு 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் – பிரதமராகப் பதவியேற்றுள்ள தனது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது ‘டவிட்டர்’ பக்கத்தில் இந்த வாழ்த்தினை கோட்டா வெளியிட்டுள்ளார். பெருமையுடனும், சந்தோசத்துடனும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ,  நிலையானதும் முற்போக்கானதுமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு

மேலும்...
அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு

அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு 0

🕔26.Oct 2018

அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.ரி.என். நிறுவனத்தின் செய்தியறைக்குள் இன்று நுழைந்த குழு ஒருவினர், அங்கிருந்த பணியாளர்களை முரட்டுத்தனமாக வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே, அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான

மேலும்...
நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு

நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு 0

🕔26.Oct 2018

– முன்ஸிப் – புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துள்ள நிலையில், “நான்தான் பிரதமராக இன்னும் பதவி வகிக்கின்றேன்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ரணில் விக்கரமசிங்கதான் பிரதமராக இருக்கின்றார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் பிபிசி க்கு கூறியுள்ளார். இந்த நிலையில், அமைச்சரவை

மேலும்...
பிரதமரானார் மஹிந்த: புரண்டது நல்லாட்சி

பிரதமரானார் மஹிந்த: புரண்டது நல்லாட்சி 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தது. இந்த நிலையில், சமீப காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்

மேலும்...
‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல்

‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல் 0

🕔26.Oct 2018

இந்திய புலனாய்வு பிரிவான ‘ரோ’ வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் இருக்கின்ற அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில், மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், அமைச்சர்கள் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு

மேலும்...
அரச வங்கியொன்றில் கொள்ளை; சிசிரிவி சாதனங்களும் அபேஸ்

அரச வங்கியொன்றில் கொள்ளை; சிசிரிவி சாதனங்களும் அபேஸ் 0

🕔26.Oct 2018

அரச வங்கிக் கிளையொன்றில் துப்பாக்கி முனையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மத்தேகொட பிரதேசத்திலுள்ள குறித்த வங்கிக் கிளைக்கு, கார் ஒன்றில், பிஸ்டல் உள்ளிட்ட துப்பாக்கிகளுடன் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொள்ளையர்கள் வந்திறங்கியுள்ளனர். இதன்போது வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அவற்றின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய்

மேலும்...
45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது 0

🕔26.Oct 2018

ஹெரோயின் போதைப் பொருளை – குளிசை வடிவில் விழுங்கிக் கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 350 கிராம் எடையுடைய 35 ஹெரோயின் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 67 வயதுடைய பெண், மற்றையவர் 44 வயதுடைய ஆண் ஆவார். கைப்பற்றப்பட்ட ஹெரோயின்

மேலும்...
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான சூழலை உருவாக்குவதற்கான, வரைவு அறிக்கை கையளிப்பு

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான சூழலை உருவாக்குவதற்கான, வரைவு அறிக்கை கையளிப்பு 0

🕔25.Oct 2018

“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கி, அவற்றை பெரிய அளவிலான நிலையான வணிக நிறுவனங்களாக மாற்றி,   ஏற்றுமதி சந்தைகளுடன் இணைப்பதற்குகாக, 3.2 மில்லியன் ரூபா செலவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தொழில் முயற்சி ஆய்வினை நடாத்தியுள்ளது. இந்த முயற்சிக்காக நிதி ஆதரவுகளை விரிவுபடுத்தியதற்காக, ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன்”

மேலும்...
தோட்டத் தொழிலாளர்களின் கவன ஈர்ப்பு போராட்டத்தில், முஸ்லிம்களும் இணையுங்கள்: பசீர் சேகுதாவூத் அழைப்பு

தோட்டத் தொழிலாளர்களின் கவன ஈர்ப்பு போராட்டத்தில், முஸ்லிம்களும் இணையுங்கள்: பசீர் சேகுதாவூத் அழைப்பு 0

🕔23.Oct 2018

– அஹமட் – மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தை, குறைந்த பட்சம் 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி, நாளை புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முஸ்லிம்களையும் கலந்து கொள்ளுமாறு, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனை படுகொலை செய்வதற்கான திட்டம்: பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

அமைச்சர் றிசாட் பதியுதீனை படுகொலை செய்வதற்கான திட்டம்: பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு 0

🕔23.Oct 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல் குமாரவினால் அம்பலத்துக்கு வந்த பின்னணியில், பொலிஸ் திணைக்களம் அது தொடர்பில், தீவிர விசாரணைகளை நடத்தி உண்மைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபரிடம், அகில இலங்கை

மேலும்...
விசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்

விசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட் 0

🕔22.Oct 2018

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை துல்ஹிரிய, மாஸ் அதெனா நிலையத்தில் இடம்பெற்ற போது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இதில் அதிதியாகக் கலந்துகொண்டார்.நாடளாவிய ரீதியில் 300 இற்கும் அதிகமான விசாரணை அதிகாரிகள்

மேலும்...
மஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி 0

🕔21.Oct 2018

மஹிந்த ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிராகரித்துள்ளதாக இரிதா திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 15 பேரைக் கொண்ட குழுவினரும், ஒன்றிணைந்த எதிரணியினரும் இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களை மேற்படி தரப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த போது, இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக,

மேலும்...
ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை

ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை 0

🕔21.Oct 2018

அடுத்த 05 ஆண்டுகளுக்குத் தேவையான மோட்டார் வாகனங்கள், நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம், மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடு அமுல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பொருளாதார நிபுணர்கள் குழுவொன்றின் அறிக்கையொன்றின் படி, வருடமொன்றுக்கு

மேலும்...
ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை

ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை 0

🕔18.Oct 2018

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் இன்று வியாழக்கிழமை 09 மணி நேரம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், நாளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு குற்றப் நாலக சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் பிர­சன்ன

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க, அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் றிசாட் திட்டவட்டம்

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க, அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் றிசாட் திட்டவட்டம் 0

🕔18.Oct 2018

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்