ஏப்ரலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0
சட்ட ரீதியான தடைகள் உடனடியாக அகற்றப்பட்டாலும் கூட, ஏப்ரல் மாதத்துக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். 06 மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவது தொடர்பில், பிரதான அரசியல் கட்சிகளுடன் தமது அலுவலகம் பேச்சு நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.