விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்

🕔 February 7, 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

09ஆவது நாடாளுமன்றத்தின் 05ஆவது கூட்டத்தொடர் – இன்று புதன்கிழமை (07) 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்முதல் ஊழல் தொடர்பில் இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என்று, செய்திகள் வெளியாகியுள்ளன.

இருந்த போதிலும், கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு – இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்