சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு
🕔 September 12, 2016
– யூ.எல்.எம். றியாஸ் –
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன.
பள்ளிவாசல்களில் மட்டுமன்றி, மைதானங்கள் மற்றும் கடற்கரை வெளிகளிலும் தொழுகைகள் இடம்பெற்றதோடு, சொற்பொழிவுகளும் நடைபெற்றன.
அந்தவகையில், சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது தொழுகை மற்றும் பிரசங்கத்தினை மௌலவி கே.எல். இப்ராஹீம் மதனி
நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது. இதில் ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்.