தேர்தல் முறைமை திருத்தங்கள் விசேட குழுவுக்கு பசில், ஹக்கீம் உறுப்பினர்களாக இணைப்பு

🕔 September 23, 2021

தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் இவ்வாறு புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, குறித்த செயற்குழுவில் உள்ளடங்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

இந்த செயற்குழுவானது அதன் தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையில் நேற்று பிற்பகல் கூடியிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அபே ஜன பலவேகய கட்சிகள் இதன்போது, தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான தமது யோசனைகளை முன்வைத்ததாக சபைத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்