சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள்

🕔 April 5, 2020

விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் 100 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதவித் தொகைகள், நாளை திங்கள்கிழமை (06ஆம் திகதி) வழங்கி வைக்கப்படவுள்ளன.

பிரதமர் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

அந்தந்தப் பகுதி கிராம சேவகர்கள் மூலமாக, பயனாளிகளின் வீடுகளில் வைத்து, இக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்படும்.

அதேவேளை விவசாயிகள் மற்றும் மீனவத்துறைக்கான ஓய்வூதியங்களை, 02ஆம் மற்றும் 03ஆம் திகதிகளில் பெற்றுக் கொள் முடியாதோருக்கு நாளைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கி வைப்பர் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்