அமைச்சுப் பதவியைத் துறப்பேன்; இறக்காமம் புத்தர் சிலை தொடர்பில், தயாகமகே அச்சுறுத்தல்

🕔 November 8, 2016

dayagamge-dcc-098றக்காமம் – மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்றும் நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்குமானால், அமைச்சுப் பதவியை துறப்பேன் என்று அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், இங்கு வரும்வரை தான் அறியவில்லை எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் அங்கு மேலும் கூறுகையில்;

“இந்த நாட்டில் புத்த மதத்துக்கு முன்னுரிமை வழக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 வரையில் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இதேவேளை முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்களும் புத்த மதத்துக்கு முதலிடம் வழங்குவதற்கு இணங்கியுள்ளனர். அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவையும் இதனை அனுமதித்துள்ளது.

வரலாற்றினை எடுத்துப் பார்த்தால், தீகவாபி விகாரைக்குச் சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காணி, கல்முனை, பொத்துவில் பகுதிகளிலும் இருந்துள்ளது.

பாகிஸ்தானிலும் புத்தர் சிலைகள் உள்ளன, அங்கு முஸ்லிம்கள் அதைப் பாதுகாக்கின்றனர். அங்கு நான் சென்றபோது, அதனைக் கண்டுகொண்டேன்.

எனவே, மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரச்சினைகள் வேண்டாம். இந்த நாட்டில் சிலை வைப்பதை நிறுத்த வேண்டும் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது தவறாகும்.  அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.

இறக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர்சிலையை அரசாங்கம் அகற்றுமானால், எனது அமைச்சுப் பதவியைத் துறந்து விட்டு, நான் வீட்டுக்குச் செல்வேன்.

எங்காவது சிலையைக் கண்டால் நான் வணங்கிச் செல்வேன். சிலைகளை வைப்பதற்காக என்னிடம் நிதியுதவி கேட்டால் நான் வழங்குவேன்” என்றார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்