06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி 0
– க.கிஷாந்தன் – டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01 மணியளவில் நிகழ்ந்ததாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து அட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற போதே, முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியது.