சகீப் சுலைமான் கொலை; சந்தேக நபர்களை 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0
பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எட்டுப் பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. சந்தேக நபர்கள் சேதாவத்தை, வெல்லம்பிட்டிய, கொழும்பு 12 மற்றம் 14 உள்ளிட்ட பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர்கள்.