மரண தண்டனைக் கைதி ‘பொட்ட’ நௌபர் மரணம்

மரண தண்டனைக் கைதி ‘பொட்ட’ நௌபர் மரணம் 0

🕔28.Aug 2021

மரண தண்டனைக் கைதியும் பிரபல பாதாள உலக நபருமான ‘பொட்ட’ நௌபர் எனப்படும் எம். என். நௌபர் மரணமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் – கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக நோய்க்கான பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு,

மேலும்...
புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம்

புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம் 0

🕔28.Aug 2021

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிகளவில் சாத்தியமுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார். மேலும், சிகரெட், சுருட்டு அல்லது வேறு வகையில் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செயல்பாடு பலவீனம் அடைவதாகவும் விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார். இவ்வாறானவர்களுக்கு கொவிட்

மேலும்...
றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள்

றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள் 0

🕔27.Aug 2021

றிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு (மனைவியின் தந்தை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், றிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

மேலும்...
வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔27.Aug 2021

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். “இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம்.

மேலும்...
நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது

நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது 0

🕔27.Aug 2021

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக, கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு  கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றது. முதற் கட்டமாக இத்திட்டம் நிந்தவூர்  கடற்கரை சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென  12

மேலும்...
தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு 0

🕔27.Aug 2021

தனிமைப்படுத்தல் ஊடரடங்குச் சட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் செயலணிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (27) நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை, நாடு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மேலும்

மேலும்...
காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி 0

🕔26.Aug 2021

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பலியானவர்களின் விவரத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக எந்த தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை,

மேலும்...
பாடகர் இராஜை தாக்கியதாக வெளியான செய்தி: மறுக்கிறார் பிரதமரின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ

பாடகர் இராஜை தாக்கியதாக வெளியான செய்தி: மறுக்கிறார் பிரதமரின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ 0

🕔26.Aug 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பிரதமரின் பணியாட் தொகுதியின் தலைமையதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ தாக்கியமையினாலேயே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல பாடகர் இராஜ் வீரரட்ன ராஜிநாமா செய்தார் எனப் பரவும் தகவலை யோஷித ராஜபக்ஷ மறுத்துள்ளார். இராஜ் வீரரத்னவை யோஷித தாக்கியதாகவும், இதனாலேயே இராஜ் – தேசிய இளைஞர்

மேலும்...
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு 0

🕔26.Aug 2021

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைவதைக் காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ‘ஃபைசர்’ தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களிடம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு ஒரு மாத காலத்தில் 88 சதவீதமாக இருந்தது. இது ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74 சதவீதமாக குறைந்திருக்கிறது. ‘ஆஸ்ட்ராசெனீகா’ தடுப்பூசியை செலுத்திக்

மேலும்...
வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை

வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை 0

🕔26.Aug 2021

ஒன்லைன் வீடியோ விளையாட்டுக்கு (video game) அடிமையான சிறுவன் ஒருவரிடமிருந்து, கைத்தொலைபேசியை பறித்து எடுத்ததால், சம்பந்தப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மாத்தறை – ரொட்டும்ப பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரே, அவரின் தாய் – கைப்பேசியை பறித்து எடுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியிலுள்ள பல

மேலும்...
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் ஒசாமாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை: தலிபான் தெரிவிப்பு

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் ஒசாமாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை: தலிபான் தெரிவிப்பு 0

🕔26.Aug 2021

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லையென தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

மேலும்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன? 0

🕔26.Aug 2021

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது இம்மாதம் 30ஆம் திகதிக்கு மேல் நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.  இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
பகிடிவதை தொடர்பில் சட்டச் சீர்திருத்தம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

பகிடிவதை தொடர்பில் சட்டச் சீர்திருத்தம்: கல்வி அமைச்சு அறிவிப்பு 0

🕔25.Aug 2021

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும்  வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் பல்கலைக்கழக அதிகாரிகளால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலை இருந்ததாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன 0

🕔25.Aug 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (25) தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் விஷேட உரையின் போதே அவர் இந்த தகவலைக் கூறினார். அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 365

மேலும்...
இலங்கையில் ‘காட்போட்’ சவப்பெட்டி: 4500 ரூபா விலையில் விற்பனை

இலங்கையில் ‘காட்போட்’ சவப்பெட்டி: 4500 ரூபா விலையில் விற்பனை 0

🕔25.Aug 2021

இலங்கையில் ‘காட்போட்’ இனால் உருவாக்கப்பட்ட சவப் பெட்கள் சந்தைக்கு வந்துள்ளன. இந்த சவப்பெட்டியின் விலை 4500 ரூபாவாகும். நாட்டில் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழைகள் குறைந்த விலையில் இந்த சவப்பெட்டிகளைக் கொள்வனவு செய்யக் கூடியதாக உள்ளது. தெஹிவளை – கல்கிஸ்ஸ நகர சபை உறுப்பினர் பிரியந்த சஹபந்துவின் யோசனையில் உருவான இந்த சவப்பெட்டிக்கான தயாரிப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்