சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்

சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன் 0

🕔10.Sep 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட விலகியுள்ள நிலையில் ‘யாரையாவது அறிவித்துத் தொலைங்கய்யா’ என்று கூறும் மனநிலைக்கு, மக்கள் வந்துவிட்டனர். இன்னொருபுறம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காமல் இப்படி இழுத்தடிப்பது,

மேலும்...
புலிகள் குறித்து  அப்படிக் கூறவேயில்லை; ஊடகங்களில் வெளியானவை உண்மைக்கு புறம்பானது: முத்தையா முரளிதரன்

புலிகள் குறித்து அப்படிக் கூறவேயில்லை; ஊடகங்களில் வெளியானவை உண்மைக்கு புறம்பானது: முத்தையா முரளிதரன் 0

🕔9.Sep 2019

“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்” என, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என, கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிறன்று நடைபெற்ற, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முரளிதரன் உரையாற்றிய போது, “புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள்தான் தனது வாழ்க்கையில் முக்கிய

மேலும்...
நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை 0

🕔9.Sep 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளையும் மத முரண்பாடுகளையும் சீர் செய்து, அதனை முடிவுக்கு கொண்டுவரும் துறையாக ஆசிரியத்  தொழில்  கருதப்படுவதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் – முருங்கனில் கல்வி அமைச்சினால்  அமைக்கப்படுள்ள ஆசிரிய தொழில் சார் வாண்மை  நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று திங்கட்கிழமை

மேலும்...
நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு

நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு 0

🕔9.Sep 2019

ரணில், கரு, சஜித், பொன்சேகா ஆகிய நால்வரில் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள வேட்பாளர் நெருக்கடி விவகாரம் குறித்தும், அமைச்சர் சஜித் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக்

மேலும்...
காத்தான்குடி அனீக்; தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை

காத்தான்குடி அனீக்; தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை 0

🕔9.Sep 2019

– மப்றூக் – உதைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக, தனது கால் ஒன்றினை இழந்த காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான தேசிய பரா மெய்வல்லுநர் விளையட்டுப் போட்டியில் 03 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் அனீக். 2018ஆம் ஆண்டு

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் 12 கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக, மஹிந்த தேசபிரியவுக்கு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் 12 கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக, மஹிந்த தேசபிரியவுக்கு அறிவிப்பு 0

🕔7.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்துவதற்கு 12 கட்சியகள் தீர்மானித்து தனக்கு அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். இதுதவிர இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தனக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்த எழுத்து

மேலும்...
eteacher: இலத்திரனியல் கற்கை இணையத்தளம்: மாணவர், ஆசிரியர்களுக்கு பொன்னான வாய்ப்பு

eteacher: இலத்திரனியல் கற்கை இணையத்தளம்: மாணவர், ஆசிரியர்களுக்கு பொன்னான வாய்ப்பு 0

🕔6.Sep 2019

இலங்கை தமிழ் பேசும் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான, புதுமை படைக்கும் இலத்திரனியல் கற்கை இணையத்தளம் இதுவாகும். eteacher இணையத்தளமானது மாணவர்களினை இணையத்தினூடாக இணைத்து கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு இலத்திரனியல் இணையத்தளமாகும். இவ் இணையத்தளத்தினூடாக ஆரம்பக் கல்வி, இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்காகவும், அரசாங்க போட்டிப் பரீட்சாத்திகள் மற்றும் ஏனைய

மேலும்...
சிம்பாவேயின் முதல் ஜனாதிபதி முகாபே மரணம்

சிம்பாவேயின் முதல் ஜனாதிபதி முகாபே மரணம் 0

🕔6.Sep 2019

சிம்பாவேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே தனது 95வது வயதில் இன்று மரணமடைந்தார். சிம்பாவேயின் விடுதலைக்கு பின் அந்நாட்டின் ஆட்சிக்கு வந்த முதல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று ரோடேசியாவில் (சிம்பாவேயின்

மேலும்...
பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அதிகாலை சம்பவம்

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அதிகாலை சம்பவம் 0

🕔6.Sep 2019

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸார் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்குரஸ்ஸ – பணத்துகம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் மீது, மோட்டாளர் பைக்கில் வந்த, அடையாளம் காணப்படாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்சிலேயே, இவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்துக்குரிய மோட்டார் பைக்கை நிறுத்துமாறு

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு 0

🕔6.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் பிறகு யோசிக்கலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கவனம் செலுத்துமாறும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனது கட்சியின் செயலாளர், தவிசாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு 0

🕔6.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார். இந்த விடயத்தை அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். சு.கட்சியினுடைய மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த

மேலும்...
முஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள்

முஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள் 0

🕔5.Sep 2019

– சுஐப் எம். காசிம் – தமிழர் தரப்பு போராட்ட வியூகங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேறு வடிவத்தில் முகங்காட்டத் தொடங்கியதிலிருந்து வடக்கு, கிழக்குச் சமூகங்களின் அரசியல் ஒன்றித்தல்களை தூரமாக்கி வருகின்றன. புலிகளின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட”பொங்கு தமிழ்” எழுச்சியூட்டல்களும், தற்போது முன்னெடுக்கப்படும் “எழுக தமிழ்” உணர்ச்சியூட்டல்களும் தமிழ் சமூகத்தின் அரசியல் விடுதலை

மேலும்...
குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம்

குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔5.Sep 2019

பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்களாக பாவிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய மறைந்த சேர் ராசிக் பரீட்; நாட்டின் தூரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, துருவப்படுத்தப்பட்டு வாழ்ந்த முஸ்லிம்களின் கஷ்ட நிலையை பற்றியும் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அதிகம் பேசியிருக்கின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கம் தெரிவித்தார். சோனக இஸ்லாமிய

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது 0

🕔5.Sep 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் அடங்குவர்.

மேலும்...
08 வயது பிள்ளையை துஷ்பிரயோகம் செய்த கல்முனைகுடி நபருக்கு விளக்க மறியல்

08 வயது பிள்ளையை துஷ்பிரயோகம் செய்த கல்முனைகுடி நபருக்கு விளக்க மறியல் 0

🕔5.Sep 2019

– பாறுக் ஷிஹான் – பாடசாலை   மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது கடந்த  சனிக்கிழமை (31) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்