பிரதேச செயலக பெண் அதிகாரி, கத்திக் குத்தில் மரணம் 0
பொலனறுவை – லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதம நிருவாக அதிகாரி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி 42 வயதுடைய பெண் எனவும், இன்று காலை கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனார். மேலும், கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த அதிகாரி உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்