கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர், இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தம்

🕔 January 11, 2022

திர்காமம் பிரதேச சபையின் தவிசாளரை அப்பதவியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர் சானக்க அமில் ரங்கன சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்ட அறிக்கை இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டன.

அவ்வாறான சந்தர்ப்பத்தில், தவிசாளருக்குப் பதிலாக பிரதித் தவிசாளரை பதில் தவிசாளராக நியமிக்க வேண்டும்.

இந்த நிலையில் தவிசாளர் அப்பதவியில் தொடர்ந்தும் நீடிக்கலாம் என, ஊவா மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கதிர்காமம் பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே, கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளரை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்