தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல் 0
உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவன பணியாளர்களுக்கு, அவர்களின் ஊடக நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி விளம்பரப்படுத்த கூடாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவனப் பணியாளர்களை, அவர்களின் ஊடக நிறுவனங்கள் முன்னுரிமை கொடுத்து விளம்பரப்படுத்துவதாக, தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.