டொக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் பெண்கள் எவரும், பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் குருணாகல் வைத்தியர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் தாய்மார்கள் எவரும் தேவையான பரிசோதனையை செய்து கொள்வதற்கு இதுவரை முன்வரவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்திசாலைகளில் மேற்படி பெண்களுக்கு பரிசோதனை செய்வதற்கான தயார் நிலைகள் இருந்தும், இதுவரை எவரும்