
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூன்றாவத சந்தேக நபராக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பெயரிடப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இத்தகைய பின்னணியிலேயே அவரை மூன்றாவது சந்தேக நபராக பெயரிட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதி சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டார்.


