தலைப்புச் செய்திகள்

மின்சார கட்டணம் தொடர்பில், எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள செய்தி

மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்று, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்னும் முறையாக கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக மின்சாரக் கட்டணங்கள் குறைந்தது 30 சதவீதம் குறைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், மின்சாரக் கட்டணங்களில் 20 சதவீதத்தைக் குறைக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைககுழு பரிந்துரைத்தது.

இருப்பினும், அதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு – எரிசக்தி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், நிதி அமைச்ச்சின் அங்கிகாரம் கிடைத்த பின்னரே கட்டணத் திருத்தம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: மின்சாரக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது: உங்கள் வீட்டுக்கு எவ்வளவு என தெரிந்து கொள்ளுங்கள்