நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

🕔 July 30, 2023

ரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையங்கள் தமது கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அந்த வயைில் 92 ஒக்டேன் பெற்றோலினை 101 எரிபொருள் நிலையங்களும் லங்கா ஓட்டோ டீசலினை 61 எரிபொருள் நிலையங்களும் 50 வீதம் கையிருப்பை நேற்றைய தினம் (29) வரை பேண தவறியுள்ளதாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான முன்பதிவுகளை செய்யுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் இருப்புக்களை முறையாக பராமரிக்க தவறிய பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் – தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

30.07.2023 காலை 8.30 மணி நிலவரப்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள எரிபொருள் இருப்பு பின்வருமாறு.

ஒட்டோ டீசல் – 124,690 மெற்றிக் தொன், சூப்பர் டீசல் – 5,651 மெற்றிக் தொன், 92 ரக பெற்றோல் – 19,903 மெற்றிக் தொன், 95 ரக பெற்றோல் – 4,537 மெற்றிக் தொன் மற்றும் விமான எரிபொருள் – 26,539 மெற்றிக் தொன் ஆகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்