நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம்

🕔 May 8, 2023

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் கலந்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தியமையே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 05 ஆம் திகதிக்கு பின்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சைக்குப் பின்னர் வழங்கப்பட்ட மருந்தின் காரணமாக, அவர்களின் கண்பார்வை பலவீனமடைந்துள்ளது அல்லது முற்றாக இழந்துள்ளதாக வைத்தியர் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சத்திரசிகிச்சைகள் முடிந்து வீடுகளுக்குச் சென்ற நோயாளர்கள் – கண்பார்வை முற்றாக இழந்த நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்