வாகன அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு

🕔 May 8, 2023

ருமான அனுமதிப்பத்திரத்தை 5 வருடங்களாக புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும், 60 இலட்சம் வாகனங்கள் மட்டுமே கியுஆர் (QR) குறியீட்டு முறைமை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வருமானவரி அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்கள், மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரின் உதவியுடன் தகவல் அமைப்பில் இருந்து நீக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்