வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி

🕔 February 22, 2023

– பாறுக் ஷிஹான் –

வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த மூவர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று (22) மாலை இடம்பெற்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து செல்லும் குறுக்கு வீதியில் – சில இளைஞர்கள் ஒன்றிணைந்து வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் விளையாட்டி வந்துள்ளனர்.

இவர்களால் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடும் நபர்களால் தொடர்ச்சியாக அப்பகுதியிலும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை நிறுத்துமாறு அருகில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் – கிரிக்கெட் விளையாடியவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் கைலப்பு ஏற்பட்டு கத்தி வெட்டு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தைக் கண்டோர் கூறுகின்றனர்.

இதில் 3 பேர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பல வீதிகளில் கிரிக்கட் விளையாட்டு இடம்பெறுவதுடன் வீதியில் செல்வோர் அதிகளவில் அசௌகரியங்களுக்குள் எதிர்கொள்வதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்